News March 24, 2025
நெருங்கும் கோடைகாலம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோடை காலத்தில் பரவக்கூடிய தோல், கண், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய், இருமல் மற்றும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன. வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் உதவியோடு உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்கவும். தேவை இன்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். SHARE NOW
Similar News
News November 17, 2025
புதுவை சைபர் கிரைம் எஸ்.பி அறிவுறுத்தல்

புதுவை சைபர் கிரைம் எஸ்.பி ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என பெண்கள், வேலையில்லா பட்டதாரிகளை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றி வருகின்றனர். இதுபோல் கடந்த 10 மாதத்தில் பெறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புகார்களில் மக்கள் ரூ.20 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் ஆன்லைனில் வரும் பொய்யான தகவலை நம்பி எமாறவேண்டாம்.” என அறிவுறுத்தியுள்ளார்.
News November 17, 2025
புதுகை: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
புதுவை: பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர்கள் கைது

திருபுவனை போலீசார் ரோந்து சென்றபோது, மதகடிப்பட்டு பகுதியில் டியூசன் சென்டர் ஒன்றின் எதிரே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதில் கடலூர் கமலேஷ், விஷ்ணு ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


