News April 20, 2025

நெமிலி அருகே நாய் கடித்ததில் 7 பேர் காயம்

image

நெமிலியை அடுத்த திருமால்பூரில் வெள்ளிக்கிழமை இரவு ஜஸ்வின் (14), கனிஷ் (14),  தருண் (15) உள்ளிட்ட பல சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் கடித்துள்ளது. அதுபோல் வெவ்வேறு இடங்களில் 4 பேரை தெரு நாய் கடித்துள்ளது. இவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெமிலி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

Similar News

News November 15, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அதிகாரிகள் தொடர்பு விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டம், இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உபமாவட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்கள், பொறுப்பதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரநிலைகளில் இந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கிய ஆட்சியர்

image

கட்டளை ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் இன்று (நவ.14) தேதி ஆட்சியர் சந்திரகலா திடீர் ஆய்வு செய்தார் .அப்போது குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு ஆட்சியர் சந்திரகலா சாக்லேட் வழங்கினார்.மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எவ்வாறு எடுக்கிறார். மாணவர்களின் கற்றல் மற்றும் எழுதும் திறன் எப்படி உள்ளது என்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.

News November 14, 2025

எஸ் ஐ ஆர் படிவம் பதிவேற்றம் ஆட்சியர் அறிவுரை

image

கொண்டாபுரம் கிராமத்தில் இன்று (நவ.14)
தேதி எஸ் ஐ ஆர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்வது குறித்து ஆட்சியர் சந்திரகலா ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்கள் பதிவேற்றம் செய்யும்போது எந்தவித தவறும் செய்யக்கூடாது. கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி உடன் இருந்தார்.

error: Content is protected !!