News March 16, 2025

நெஞ்சு வலியால் ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

image

கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூரையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 17, 2025

கள்ளக்குறிச்சி: மரக்கிளை முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜோதி(48). இவர் கடந்த 6ம் தேதி சேலம் செல்ல ஏமப்பேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். சாலையோர புளியமரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 17, 2025

கள்ளக்குறிச்சி: நகை பாலிஷ் காவல்துறையினர் எச்சரிக்கை

image

சங்கராபுரம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள், கிராமங்களில் தங்க நகையை பாலிஷ் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பாலிஷ் போடும் போது, அசல் நகையை எடுத்துக்கொண்டு, ‘கவரிங்’நகையை கொடுத்து மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News March 16, 2025

மலர் தூவி ரயிலை வரவேற்ற பொதுமக்கள்

image

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று இன்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டும், இரண்டாம் ஆண்டு துவங்குவதை ஒட்டி இன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்தூர்பேட்டை பகுதி சமூக ஆர்வலர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் மலர்தூவி வரவேற்றனர்.

error: Content is protected !!