News April 8, 2025
நெசவாளர் திட்டங்களில் சுணக்கம்: அரசு அலட்சியம்

காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதில் சுணுக்கம் ஏற்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நெசவாளர்களின் கூலி உயர்வு இல்லை. தனியார் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி விவகாரத்தில், வரையறை இல்லை. மழைக்காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் பெறும் திட்டத்தில் அலைக்கழிப்பு, கழிவுத்தொகை, 200 ரூபாயாகவே பல ஆண்டுகளாக தொடர்கிறது.
Similar News
News September 18, 2025
காஞ்சிபுரம்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி!

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் & தீயணைப்பாளர் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் வரும் செப்.,22 முதல் நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
காஞ்சிபுரம்: தலை நசுங்கி ஒருவர் பலி!

காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (52) ஆச்சாரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று (செப்.,18) தனது மகளுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஓரிக்கை, மிலிட்டரி ரோடு சத்யா நகர் பகுதியில், பணியாளர்களை அழைத்துச் செல்ல வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியதில், ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 18, 2025
காஞ்சிபுரத்தில் இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <