News August 7, 2024
நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

சென்னை எழும்பூரில் கைத்தறித்துறை சார்பில் பத்தாவது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு நெசவாளர்களுக்கு விருதுகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கைத்தறி துறையின் மூன்றாண்டு சாதனை புத்தகம் வெளியிடுதல், கைத்தறி குழும வடிவமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News September 19, 2025
சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த 2 நாட்களும் மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் 21ம் தேதி மகாளய அமாவாசை என்பதால் நாளை செ.20, 21ம் தேதிகளில் ராமேஸ்வரத்துக்கு, மீண்டும் சென்னை திரும்பும் பயணத்துக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என எஸ்இடிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News September 18, 2025
BREAKING: சென்னையில் பிரபல நடிகர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று (செ.18) உடல்நலக் குறைவால் காலமானார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், துரைப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முன்னதாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை காரணமாக உடல் பலவீனமடைந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 18, 2025
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி மாணவர் சேர்க்கை செப்.30 வரை நீட்டிக்கப்படுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இதில் 14 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சியில்
சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது.