News December 6, 2024
நூதன ஆன்லைன் மோசடி: பொதுமக்களே உஷார்

ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரியான சீனிவாசன் என்பவருக்கு வந்த செல்போன் அழைப்பில், தான் சிபிஐ அதிகாரி என தெரிவித்துள்ளார். பின், ஆதார் கார்டு, சிம்கார்டு எண்ணை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதனால் நீங்கள் விரைவில் கைது செய்யவுள்ளோம் என கூறி ரூ.27 லட்சத்தை பறித்துக்கொண்டனர். இதனையடுத்து அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்டனர்.
Similar News
News December 23, 2025
ஈரோட்டில் 351 பேர்: அதிரடி கைது

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை ரேஷன் அரிசி கடத்தியதாக 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தொடர்புடைய 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 135 டன் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 144 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 22, 2025
ஈரோடு வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஈரோடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது நமது கடமை, ஆகையால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மையங்களில் வரும் டிச 27,28 தேதியும், ஜன 03,04 ம் தேதியும் வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான படிவம் 6, 6A, 6B, 7, 8 ஆகியவற்றை முறையாக பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (Booth Level Officers) ஒப்படைக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின்
சார்பாக தெரிவிக்கப்பட்டது.
News December 22, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


