News April 3, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News September 18, 2025

நீலகிரி: வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை!

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே படைச்சேரி பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தது. இந்த யானை, தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே, காபி மரங்களை சேதப்படுத்தியது. அப்போது, பாக்கு மரம் வீட்டு கூரை மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டது. வீட்டினுள் அறையில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சகர் அய்யனார் நேரில் ஆய்வு செய்தார்.

News September 18, 2025

நீலகிரியில் காட்டு யானை அட்டகாசம்!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ ஹோப் கிளை நூலகத்தை இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று நூலகத்தின் கதவை சேதப்படுத்தி உள்ளது. உணவு தேடி வந்த யானை கதவை சேதப்படுத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நூலகத்தின் கதவை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் யானை உணவு தேடி வரலாம் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

News September 18, 2025

நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் 5 திட்டங்களுக்கு இ-சேவை வழியாக விண்ணப்பிக்கலாம். அதன்படி கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை போன்றவற்றை http://www.tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை உடனடியாக மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!