News August 8, 2024

நீலகிரி: மாபெரும் கல்விக்கடன் முகாம்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரி அரங்கில் இன்று மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகமை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்தியது. முகாமிற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை தாங்கினார். இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Similar News

News October 14, 2025

பசுமாட்டினை அடித்துக் கொன்ற மர்ம விலங்கு

image

கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் மர்ம விலங்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று காலை கூடலூர் பிரதான பகுதியான காலம்புழா அடுத்து புறமண வயல் பகுதியில், ஒரு பசுமாட்டினை அடையாளம் தெரியாத ஒரு வனவிலங்கு தாக்கியது. இதில் அந்த மாடு இறந்தது. இந்த பசுவினை புலி அடித்துக் கொண்டிருக்கும் என்று அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 13, 2025

குன்னூர் இளைஞர்களுக்கு ரூ.15,000 அபராதம்

image

குன்னூர் உலிக்கல் சேலாஸ் அருகே சாலை ஓரத்தில் படுத்திருந்த காட்டெருமையின் முன்புறம், மூன்று இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், மூன்று நபர்களுக்கு குன்னூர் 15,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார்.

News October 13, 2025

கோத்தகிரியில் தீப்பற்றி எரிந்த கார்!

image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, அரவேனு இடையே  டாட்டா இன்டிகா கார் ஒன்று, இன்று மதியம் சென்றுகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!