News August 3, 2024

நீலகிரி பெண் செவிலியருக்கு குவியும் பாராட்டு

image

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு பகுதியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக எதிர் திசையில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பெண் செவிலியர் சபீனா என்பவர் ராணுவத்தினர் அமைத்த ஜிப்லைனில் தொங்கியபடி அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். இவரின் செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Similar News

News December 18, 2025

நீலகிரியில் வேலை வேண்டுமா? APPLY NOW

image

உதகை அரசுக் கலை கல்லூரியில் (20/12/25)-ம் தேதி மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்கின்றனர். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து இணையம் வாயிலாக முன்பதிவு
செய்ய வேண்டும் என வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

News December 18, 2025

நீலகிரி: இன்றே கடைசி நாள்

image

நீலகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் பணிகளை செய்தவர்கள் தமிழக அரசின் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இதனை மாவட்ட சிறுபான்மை அலுவலகத்தில் இன்று (18/12/25)-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்

News December 18, 2025

நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை

image

நீலகிரி மாவட்டம் உதகையில், மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களுர் பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்ப்பு பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். இதற்கு அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!