News March 20, 2024

நீலகிரி: புலி தாக்கி மீண்டும் பசு மாடு பலி

image

ஓவேலியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியை சேர்ந்தவர் புஷ்ராஜ். இவர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை நேற்று ( மார்ச் 19) மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தேடி சென்ற போது புலியிடம் சிக்கி பலியானது தெரிந்தது. ஏற்கனவே பந்தலூரில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 3, 2025

நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88  ஊராட்சிகளும் அதில் 8 கிராம ஊராட்சிகள் பிரிக்காமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக மறு சீரமைப்பு செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்ட  சிறப்பு அரசிதழ் 16 தேதி வெளியிடப்பட்டுள்ளது . பொதுமக்கள் இது குறித்த கருத்துக்களை 17 தேதிக்குள் அனுப்பலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

News December 3, 2025

கூடலூர்: பெண்ணை தாக்கி கொன்ற புலி சிக்கியது

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மசினகுடி மாவனல்லா பகுதியில் கடந்த 24.11.2025 அன்று ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பழங்குடியினரான நாகியம்மாள் என்பவரை புலி தாக்கிக் கொன்றது. தொடர்ந்து வனத்துறையினர் 40க்கும் மேற்பட்ட இடத்தில் கேமராக்கள் வைத்து கண்காணித்த நிலையில் இன்று டிT37 என்ற பெயரிட்ட புலி கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

News December 3, 2025

நீலகிரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!