News February 15, 2025
நீலகிரி: பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

பிரசவித்த தாய்மார்கள், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் நலம். இதனால் ஆட்சியரை இரத்த உறவை தடுக்க முடியும். 8 மணி நேரம் உறக்கம் அவசியம், குழந்தைக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தாய் பால் புகட்ட வேண்டும், குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக தாய் பால் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நீலகிரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் கூடலூர் வட்டம் நெல்லியாலம் பகுதிக்கு நாளை (செப்.19) பாரிஸ் ஹாலில் முகாம் நடைபெறுகிறது. சேரங்கோடு ஊராட்சிக்கு அய்யன்கொல்லி சர்ச் ஹாலிலும், ஊட்டி வட்டம் தூனேரி கிராம ஊராட்சிக்கு அணிக்குகோரை சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த முகாம்களில் அளிக்கலாம்.
News September 18, 2025
செப்.20ல் நீலகிரிக்கு வரும் எம்பி., ஆ.ராசா!

ஊட்டி தமிழக மாளிகையில் வருகிற 20ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு கூட்டத்தில் நீலகிரி எம்.பி. ஆ. ராசா பங்கேற்கிறார். மேலும், மாலை 4.30 மணிக்கு ஏடிசி பகுதியில் நடைபெறும் “ஓர் அணியில் தமிழ்நாடு” பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். இந்த தகவலை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கே.எம். ராஜு தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
நீலகிரி: ஓவியத்தை கண்டு பயந்த காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள மசினகுடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலையை கடந்த காட்டு யானை ஒன்று சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தைப் பார்த்து, நிஜ யானை என அதிர்ச்சி அடைந்தது. முதலில் பயந்து நின்ற அந்த காட்டு யானை, அச்சத்துடன் அந்த யானை பார்த்து அச்சத்துடனே நின்றது. இக்காட்சியை அப்பகுதி வழியே சென்ற சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்தனர். இந்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.