News April 24, 2025
நீலகிரி: நாளை வேலைவாய்ப்பு முகாம்!

உதகை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை ஏப்.25ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில், tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னர், கல்வி மற்றும் அடையாளாச் சான்றுகளுடன் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
Similar News
News October 14, 2025
நீலகிரி: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 14, 2025
நீலகிரியில் 2½ வயது ஆண் குழந்தை கொலை

கூடலூர் ஓ.வி.எச். சாலை பகுதியை சேர்ந்த தம்பதி பிஜு ஜேக்கப்-சரஸ்வதி. இவர்களுக்கு ஆகாஷ் (12). பிரதிக் ஷா (10), லோகித் (2½) என 3 குழந்தைகள் இருந்தனர். கடன் சுமை காரணமாக சரஸ்வதி 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இளைய மகன் லோகித் சிகிச்சை பலனின்றி இறந்தான். கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News October 14, 2025
நீலகிரியில் ரூ.5000 அபராதம் விதிப்பு: அதிரடி உத்தரவு

குன்னுார், சேலாஸ் சாலையில் படுத்திருந்த காட்டெருமையின் அருகில் சென்ற உலிக்கல் நேர்கம்பை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27), ஜீவக்குமார் (27), கோபால கிருஷ்ணன் (35) ஆகிய மூவரும் ஆபத்தை அறியாமல் அமர்ந்தும், நின்றும் செல்பி எடுத்துள்ளனர், இச்செயலை எச்சரிக்கும் விதமாக நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் மூவருக்கும், 5,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.