News March 4, 2025

நீலகிரி: நடுரோட்டில் தீ பற்றி எரிந்து கார்

image

ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி ராஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். இந்த நிலையில் கேத்தி அருகே வேலி வியூ பகுதியில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே சுதாரித்து கொண்ட ராஜா குடும்பத்துடன் கீழே இறங்கி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது.

Similar News

News December 10, 2025

நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்!

image

நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

News December 10, 2025

காவலரை விரட்டிய காட்டு யானை; பந்தலூரில் பரபரப்பு

image

பந்தலூர்: சேரம்பாடி போலீசில் காவலராக உள்ள யோகேஸ்வரன் (29), நேற்று பந்தலூர் நீதிமன்றத்துக்கு பைக்கில் சென்றார். மண்டசாமிகோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த யானை திடீரென அவரை துரத்தியது. பைக்கை வீசி ஓடிய அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 10, 2025

தொட்டபெட்டா சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை!

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்குச் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (டிசம்பர்.10) சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, தொட்டபெட்டா காட்சி மனை ஒரு நாள் தற்காலிகமாக முட்டப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கவலை அடைகின்றனர்.

error: Content is protected !!