News March 4, 2025
நீலகிரி: நடுரோட்டில் தீ பற்றி எரிந்து கார்

ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி ராஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். இந்த நிலையில் கேத்தி அருகே வேலி வியூ பகுதியில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே சுதாரித்து கொண்ட ராஜா குடும்பத்துடன் கீழே இறங்கி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது.
Similar News
News December 20, 2025
நீலகிரியில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5,33,076 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,54,759 பெண் வாக்காளர்கள் 2,78,299 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 56,091 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
ஊட்டியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 10,+2, டிகிரி முடித்த, வேலை தேடும் நபர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004 மற்றும் 9489026936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News December 20, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.


