News August 18, 2024

நீலகிரி: தேயிலை தோட்டத்தில் பதுங்கிய மலைப்பாம்பு!

image

குன்னூர் அருகே கொலக்கம்பை கோட்டக்கல் எஸ்டேட் உள்ளது. அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக தொழிலாளர்கள் நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர், 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து, கொலக்கம்பை அருகே அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Similar News

News November 22, 2025

நீலகிரி: பெண் போலீசுக்கு ஆபாச வீடியோ.. ஒருவர் கைது!

image

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (45). இவர் நீலகிரி எஸ்பி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனை எண்ணை குறித்துக்கொண்டு முருகன், வாட்ஸ்-அப்புக்கு ஆபாச புகைப்படம், வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இன்ஸ்பெக்டர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊட்டி ஊரக போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

News November 22, 2025

நீலகிரி: இன்று ஒருநாள் தடை அறிவிப்பு!

image

நீலகிரி, குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து ஜிம்கானா வரையிலான ஆரஞ்ச் குரோவ் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 நாட்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அரசு டவுன் பஸ்கள், ராணுவ வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், 22-ம் தேதி (இன்று) ஒரு நாள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

News November 22, 2025

ஊட்டி: காட்டு மாட்டை வேட்டையாடியவர் கைது

image

ஊட்டி அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் நேற்று முந்தினம் அதிகாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் வழிக்கடவை சேர்ந்த ரேஜி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிய 4 பேரை தேடி வருகின்றனர். இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!