News May 17, 2024

நீலகிரி: டாஸ்மாக் கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

image

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட நிறைவுபெறும் சூழலில் உள்ளது. இந்நிலையில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும் நிலையில் அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்கள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அருணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 9, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம், 2024 25 ஆம் ஆண்டுக்கான எஸ்சி எஸ்டி எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, தலா ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கிட ஆணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள எஸ்சி, எஸ்டி எழுத்தாளர்கள் tn.gov.in-ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

News November 9, 2025

நீலகிரி: பீர் பாட்டிலால் பெண்ணை தாக்கிய நபர்!

image

உதகையில் உள்ள ஒரு கைப்பேசி கடைக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர், அங்கு வாங்கிய ஹெட்செட் வேலை செய்யவில்லை என்று கூறி மாற்றி தருமாறு கேட்டுள்ளார். அங்கிருந்த பெண், டேமேஜ் ஆகியுள்ளதால் மாற்றி தரமுடியாது என்று கூறவே, அந்த நபர் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பீர் பாட்டிலை எடுத்து உடைத்து பெண், அப்துல் ஹக்கீம், ரஞ்சித் குமார் ஆகியோரை தாக்கி விட்டு ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

News November 9, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம் 2024 25 ஆம் ஆண்டுக்கான எஸ்சி எஸ்டி எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து தலா ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கிட ஆணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள எஸ்சி எஸ்டி எழுத்தாளர்கள் tn.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!