News November 23, 2024
நீலகிரி காவலர்களுக்கு ஆய்வு பயிற்சி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், வழக்குகள் சம்பந்தமான தடயவியல் மற்றும் அறிவியல் ஆய்வு பயிற்சி, காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் இன்று உதகையில் நடைபெற்றது. கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகளில் காவல்துறைக்கு பெரிதும் உதவக்கூடியது தடயவியல் ஆகும். அதற்குரிய ஆய்வு பயிற்சி நடைபெற்றது.
Similar News
News December 1, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில்
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோக திட்ட பொருட்கள் நாளை முதல் இரு நாட்கள் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவிப்பு
News December 1, 2025
குன்னூரில் தடை விதிப்பு! எதற்கு தெரியுமா?

நீலகிரி மாவட்டம், குன்னூர் கரன்சி , லேம்ஸ்ராக் பகுதிகளில் கடந்த வாரத்தில் இரு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.வனத்துறையினர் கண்காணித்து அளக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர். கோத்தகிரி பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் அளக்கரை தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தேயிலை பறிக்க செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
குன்னூர்: பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு

குன்னூர் அரசு மருத்துவமனையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு, இன்று (நவம்பர் 30) மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தங்க மோதிரம் அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் பாருக், மாவட்ட அவை தலைவர் போஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


