News August 17, 2024
நீலகிரி: ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கூட்டாடா அருகே கோவில் மட்டம் பகுதியில் அரசு பேருந்தில் உயர் அழுத்த மின் கம்பி உரசிய விபத்தில், பேருந்து ஓட்டுனர் பிரதாப் (42) உயிரிழந்தார். இந்நிலையில், பிரதாப் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்திரவிட்டுள்ளார்.
Similar News
News November 6, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். 10 வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றோருக்கு 300 ரூபாயும், பட்டய படிப்பு படித்தவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. எனவே ஊட்டி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
News November 5, 2025
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (05.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News November 5, 2025
நீலகிரி: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)


