News August 18, 2024

நீலகிரி: ஆக்கிரமிப்பை அகற்றி வன நிலம் மீட்பு

image

நீலகிரி: பந்தலூர் அருகே பாட்டவயல் சோதனை சாவடி அருகே வன நிலத்தை சந்தோஷ் என்பவர் ஆக்கிரமித்து ஓட்டல் கட்டி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வன நிலத்தில் கட்டிடம் கட்டியது தவறு என்றும், அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் பேரில், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகளுடன் நேற்று சென்று ஆக்கிரமிப்புக் கடையை அகற்றினர்.

Similar News

News November 24, 2025

நீலகிரியை சேர்ந்தவருக்கு அரசு விருது

image

நூலகத் தந்தை எனப் போற்றக்கூடிய ரெங்க நாதன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நல் நூலகர் விருதும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அதிகரட்டி கிளை நூலகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு நல் நூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது இவ்விருதிணை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வழங்கினார்.

News November 24, 2025

BREAKING கூடலூர் அருகே புலி தாக்கி பெண் பலி

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த பழங்குடியின பெண் புலி தாக்கி உயிரிழப்பு. மேலும் உயிரிழந்த அப்பெண்ணின் உடலானது ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை கொன்ற புலியை உடனடியாக பிடிக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News November 24, 2025

நீலகிரி: B.Sc, B.E, B.Tech, B.Com, படித்தவரா நீங்கள்?

image

நீலகிரி மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025, 4.
சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!