News August 16, 2024
நீலகிரியில் 42 மாதங்களில் 2958 பெண்கள் கருக்கலைப்பு

நீலகிரியில் கடந்த 42 மாதங்களில் 2958 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரம் தமிழகத்தில் குறைந்தபட்ச கருக்கலைப்பு விவரமாகும்.
Similar News
News December 6, 2025
ஊட்டி சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

நீலகிரி மலை ரயில் நிர்வாகம், சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடைமேட்டுப்பாளையத்தில் காலை, 9:10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06171) ஊட்டியை மதியம், 2:25 மணிக்கு சென்றடையும். இயக்கப்படும் நாட்கள்: டிச., 25, 27, 29, 31. ஜன., 2,4, 15, 17, 23, 25.ஊட்டியில் இருந்து காலை, 11:25 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06172) மாலை 4:20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.
News December 6, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 6, 2025
குன்னூரில் 3500 பேருக்கு ஓட்டு இல்லையா? அதிர்ச்சி தகவல்

குன்னூர் நகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில், குன்னூர் நகராட்சியில் மட்டும் 618 இறந்தவர்கள் மற்றும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. மேலும் மொத்தம் 2800 மேற்ப்பட்ட பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணி முடிவில் 3500க்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியல் நீக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.


