News August 2, 2024
நீலகிரியில் 1,12,750 மகளிருக்கு உரிமைத் தொகை

நீலகிரி ஆட்சியர் லட்சுமி திவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குன்னூர் வட்டத்தில் 19,332 பேர், கூடலூரில் 22,950 பேர், கோத்தகிரியில் 16,263 பேர், குந்தாவில் 6,718 பேர், பந்தலூரில் 20,019 பேர், உதகையில் 27,468 என மொத்தம் 1,12,750 மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 1, 2025
குன்னூரில் தடை விதிப்பு! எதற்கு தெரியுமா?

நீலகிரி மாவட்டம், குன்னூர் கரன்சி , லேம்ஸ்ராக் பகுதிகளில் கடந்த வாரத்தில் இரு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.வனத்துறையினர் கண்காணித்து அளக்கரை வனப்பகுதிக்கு விரட்டினர். கோத்தகிரி பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் அளக்கரை தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டுள்ளது. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தேயிலை பறிக்க செல்ல தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
குன்னூர்: பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு

குன்னூர் அரசு மருத்துவமனையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு, இன்று (நவம்பர் 30) மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தங்க மோதிரம் அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் பாருக், மாவட்ட அவை தலைவர் போஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News December 1, 2025
குன்னூர்: பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் பரிசு

குன்னூர் அரசு மருத்துவமனையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான நவம்பர் 27ஆம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு, இன்று (நவம்பர் 30) மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தங்க மோதிரம் அணிவித்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னாள் சிறுபான்மை துணை அமைப்பாளர் பாருக், மாவட்ட அவை தலைவர் போஜன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


