News March 3, 2025
நீலகிரியில் மார்ச் 31 கடைசி நாள்

தமிழ்நாட்டில் நியாயவிலை கடைகளில் மார்ச் 31 வரை வேட்டி,சேலையை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் வேட்டி, சேலைகளை இதுவரை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் கூடலூர் பந்தலூர் ஊட்டி ஆகி தாலுகாவில் உள்ள வேட்டி, சேலை வாங்காதவர்கள் மார்ச் 31க்குள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
நீலகிரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ( 19.09.2025) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
உதகை மாரியம்மன் கோயிலில் மோடி பெயரில் சிறப்பு பூஜை

உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு நகர பாஜக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் உதகை நகர தலைவர் ரித்து கார்திக், மாவட்ட முன்னாள் தலைவர் மோகன்ராஜ் , மாவட்ட பொருளாதார அணி தலைவர் நித்தின் சந்திர சேகர், மாவட்ட துணை தலைவர் அருண், நகர துணை தலைவர்கள் சுதாகர் மஞ்சுநாத், பட்டாபிராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிவிப்பு: குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும், கூடலூர் பழங்குடியினர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திலும் கடந்த 12ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. பயிற்சி காலம் ஓராண்டு முதல் 2ஆண்டு வரை, கல்வித் தகுதி 8 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, வயது 18 முதல் 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.