News August 27, 2024

நீலகிரியில் இன்று கனமழை

image

கோவை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக #IMD தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தாக்கத்தின் காரணமாக கடந்த சில மாதங்களில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இன்றைய மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Similar News

News November 19, 2025

நீலகிரி: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

image

நீலகிரி மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

News November 19, 2025

நீலகிரியில் பட்டதாரி இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் தொல்குடியினர்
புத்தாய்வு திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு
₹10,000 நிதியுதவியும் முனைவர் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு ₹25,000 நிதியுதவியும் வழங்கபட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை
www.fellowship.tntwd.org.in என்ற
இணையதள பக்கத்தில் (12/12/2025)
தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 19, 2025

மசினகுடி: யானை காணவில்லை

image

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்துக்கு உட்பட்ட, வாழைத்தோட்டம், மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில உலா வந்த ரிவால்டா, என்ற காட்டு யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம், கண் குறைபாடு காரணமாக, பல ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு இருந்தது, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென யானை காணாமல் போனது. அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

error: Content is protected !!