News April 24, 2025

நீர்நிலைகளில் போலீஸ் ரோந்து – எஸ் பி உத்தரவு

image

கோடை விடுமுறை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நீர்நிலைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நீர் நிலைகளில் குளிக்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News December 7, 2025

குமரி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

image

குமரி மாவட்ட மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<>இங்கே கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

குமரி: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி அவர்களிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த பினு என்பவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 7, 2025

குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று தெரிவித்தனர். கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!