News April 15, 2025

நீரில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமன்னார்கோயில் அருகே வடக்கு கொளக்குடியில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் இறந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என கூறப்பட்டுள்ளது.

Similar News

News October 16, 2025

மின்னல் தாக்கி பெண்கள் பலி; எஸ்பி விசாரணை

image

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

News October 16, 2025

கடலூர்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே.. உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

News October 16, 2025

தர நிர்ணயத்தை பின்பற்ற வேண்டும்; ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகளின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு (ம) தர நிர்ணய விதிமுறைகளை
பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இனிப்பு கார வகைகள் செய்ய சுத்தமான எண்ணெயில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!