News April 15, 2025
நீரில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமன்னார்கோயில் அருகே வடக்கு கொளக்குடியில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் இறந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
வழிமறித்து தாக்கியவர் கைது

கீழிருப்பை சேர்ந்த சூரிய பிரகாஷ்(23) மற்றும் சிவராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிள் சென்றுள்ளனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஞானேஷ் குமார் (48), தளபதி (45) அகிய இருவரும் ரோட்டில் வழிமறித்து நின்றனர். இதனை கேட்ட சூரிய பிரகாஷ், சிவராஜ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டி விடுத்தனர். காயமடைந்த சிவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். காடாம்புலியூர் போலீசார் ஞானேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News November 16, 2025
கடலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; எச்சரிக்கை

வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவானது.
இதனால், கடலில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடலூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் நித்தியா பிரிய தர்ஷினி அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


