News April 11, 2025
நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

எண்ணூர் மற்றும் படப்பை அருகே 2 வேதனையூட்டும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடல் மற்றும் ஏரியில் நீரில் மூழ்கி 11 வயது சிறுவர்கள் சாய்மோனிஷ் மற்றும் சோஜான் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 10) உயிரிழந்தனர். சாய்மோனிஷ், தாழங்குப்பம் கடற்கரையில் அலையில் சிக்கி உயிரிழந்தார். சோஜான், ஆதனூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது மூழ்கி உயிரிழந்தார். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
திருவள்ளூர்: சம்பளம் வரலையா..? உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
செங்குன்றம்: கஞ்சா கடத்திய மூவர் கைது!

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சோழவரம் மொண்டியம்மன் நகர் சோதனை சாவடியில் நேற்று(நவ.14) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூவரை பிடித்து, சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, சிவகங்கை அமரன் சூர்யா(28) துாத்துக்குடி பாலாஜி(26) ராமநாதபுரம் பூவலிங்கம்(29) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
News November 15, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (14.11.2025) இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.


