News August 2, 2024
நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
Similar News
News November 28, 2025
மதுரையில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

மதுரை மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News November 28, 2025
மதுரை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! APPLY NOW

மதுரை மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <
News November 28, 2025
மதுரை: சகோதரியின் வீட்டை அடித்து நொறுக்கிய முதியவர்கள்

மதுரை அருகே காஞ்சரம் பேட்டையை சேர்ந்த பஞ்சவர்ணம்(56), அவரது வீட்டின் அருகே ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு வீடு கட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த அவரது சகோதரர் முத்துமாயி(70), பழனியம்மாள்(60) ஆகியோர் சேர்ந்து அந்த இடம் தனக்கு தந்தை கொடுத்ததாக கூறி பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அடித்து நொறுக்கினர். புகாரின் பேரில் எம்.சத்திரப்பட்டி போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.


