News August 2, 2024

நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

image

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Similar News

News September 17, 2025

மதுரை: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை <>இங்கே கிளிக் செய்து<<>> பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE IT

News September 17, 2025

மதுரை – டெல்லிக்கு தினசரி விமான சேவை

image

மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே விமான சேவை இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் விமான நிறுவனம் டெல்லிக்கு தினசரி விமான சேவை அளிக்க உள்ளது அதன்படி தினமும் அதிகாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு அந்த விமானம் காலை 8:25 மணிக்கு மதுரை வந்தடையும், மறுமார்க்கமாக காலை 8:55 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:10 மணிக்கு டெல்லி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.

News September 17, 2025

மதுரை: மழைக்காலங்களில் இந்த எண்கள் உதவும்

image

மதுரை மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வரும் சமயத்தில், மரங்கள் சாய்வது, மின்கம்பிகள் அறுந்து விழுவது போன்ற இடர்பாடுகள் நடப்பது இயல்பாகியுள்ளது. ஆகவே, மதுரை மக்கள் அத்தகைய சூழலை எளிதில் அணுக அதற்கான எண்கள்:
▶️கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077
▶️மாவட்ட அவசர கட்டுப்பாடு அறை :0452 – 2546160
▶️வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) :98949 70066
▶️ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) : 0452 – 2533272 *SHARE IT

error: Content is protected !!