News August 2, 2024

நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

image

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Similar News

News December 20, 2025

மதுரை கலெக்டர் அறிவிப்பு.!

image

மதுரை மாவட்டத்தில் 2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் 21 நாட்களுக்கு அனைத்து கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 4 மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவிட்டுள்ளார்.

News December 20, 2025

மதுரை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News December 20, 2025

மதுரை: ரூ.60 லட்சம் மோசடி: கூலாக போஸ் கொடுத்த கும்பல்..!

image

மதுரையை சேர்ந்த தம்பதியினரை டிஜிட்டல் அரஸ்ட் செய்ததாகக் கூறி, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த நீலகிரி மாவட்டம் கூடலுார் மரப்பாலம் சுதீஷ் என்ற உமர்பாரூக் (28), பந்தலுார் முகமது ரியாஷ் (29), கேரளா மலப்புரம் பாபு (49), அப்துல் கபூர் (43), முகமது சையது (34), முகமது சமீம் (34) என மொத்த கும்பலை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!