News April 23, 2025

நீட் மாதிரி நுழைவுத் தேர்வுக்கு இன்றே கடைசி

image

பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக மதுரையில் தனியார் நாளிதழ் – ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஏப்.27 காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 96777 60856 என்ற அலைபேசி எண்ணில் இன்று மாலை (ஏப்.23) 5 மணிக்குள் முன் பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News December 17, 2025

மதுரையில் தொழில் நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலை

image

மதுரையில் சமீர் மால் (46) என்பவர் 7 ஆண்டுகளாக எலக்ட்ரிக் பொருட்கள் விற்கும் தொழில் செய்து வந்தார். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, மதுரை G.H-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 17, 2025

மதுரை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

image

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க

News December 17, 2025

மதுரை: மதுவால் இளைஞர் தற்கொலை

image

மதுரை மாவட்டம் சமயநல்லூர் ஊமெச்சிக்குளம் காந்தி கிரவுண்ட் தெருவில் வசித்து வந்தவர் அருண்பாண்டி (25). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால், மனமுடைந்த அருண்பாண்டி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!