News November 25, 2024
நீட் தேவை இல்லை என்பதே அனைவரின் கருத்து: அப்பாவு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளரிடம் கூறுகையில், நீட் தேர்வை தேசிய முகமை நடத்துகிறது என வைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் உள்ள கல்வி கட்டமைப்பை பிரதிபலிக்கக்கூடிய தேர்வாக உள்ளது. 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கொடுத்தால்தான் நியாயமாக இருக்கும். நீட் தேர்வு தேவை இல்லை என்பதே அனைவரது கருத்தாக உள்ளது என்றார்.
Similar News
News November 21, 2025
நெல்லை: ரூ.1,23,100 ஊதியத்தில் வேலை., தேர்வு இல்லை!

நெல்லை மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரூ.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <
News November 21, 2025
நெல்லை: PF-ல் சந்தேகமா? தேதி அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நேரு நகர் நேரு நர்சிங் கல்லூரியில் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இதில் PF சார்ந்த உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என ஆணையாளர் சிவசண்முகம் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.


