News November 25, 2024

நீட் தேவை இல்லை என்பதே அனைவரின் கருத்து: அப்பாவு

image

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளரிடம் கூறுகையில், நீட் தேர்வை தேசிய முகமை நடத்துகிறது என வைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் உள்ள கல்வி கட்டமைப்பை பிரதிபலிக்கக்கூடிய தேர்வாக உள்ளது. 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் கொடுத்தால்தான் நியாயமாக இருக்கும். நீட் தேர்வு தேவை இல்லை என்பதே அனைவரது கருத்தாக உள்ளது என்றார்.

Similar News

News November 19, 2025

நெல்லையில் காட்டு யானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு

image

மாஞ்சோலை அருகே கோதையாறு வனப்பகுதியில் அரிகொம்பன், புல்லட் ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று காட்டு யானைகள் வேறு பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விடப்பட்டன. இந்நிலையில் நேற்று திடீரென ஒரு காட்டு யானை பள்ளத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. மேலும் ராதாகிருஷ்ணன் யானை தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News November 19, 2025

பணம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

கூடங்குளம் அருகே கட்டுமான தொழில் செய்யும் பிரவீன் என்பவரிடம் சத்யாதேவி என்ற பெண் தன்னை சப் கலெக்டர் என கூறி அறிமுகமாகி அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பிரவீனிடம் 17 பவுன் நகை, 8½ லட்சம் பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் சத்யாதேவி மற்றும் செல்லத்துரை ஆகிய இருவர் கைதான நிலையில் சுரேஷ் என்பவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

News November 18, 2025

நெல்லையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

image

நெல்லை பாளையில் உள்ள மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணை இயக்குனர் சரவணபாபு அலுவலகம் மற்றும் மற்றொரு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்கால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!