News March 29, 2025

நீட் தேர்வு அச்சம்: மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி, அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்கு பயின்று வந்துள்ளார். வரும் மே மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு தயாராகி வந்த இவர், ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் வரவில்லை. இந்நிலையில், தேர்வுக்கு பயந்து நேற்று (மார்.28) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 12, 2025

சென்னை: சுவாசிக்கும் காற்றில் கலந்துள்ள ஆபத்து!

image

சென்னை மக்கள் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன என பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை நச்சுப் பொருள்களையும் நுண்ணுயிரிகளையும் சுமந்து நுரையீரலுக்குள் சென்று சுவாசப் பிரச்சினைகள், அழற்சி மற்றும் நீண்டகால நோய்களை ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து மாஸ்க் அணிவது போன்ற முன்னெச்சரிக்கைகள் அவசியம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஷேர் பண்ணுங்க.

News November 12, 2025

சென்னையில் 342 வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை, ஏப்ரல் மாதத்திலிருந்து 342 வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும், அவை அனைத்தும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் ஏ.அருண் தெரிவித்தார். ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், ஒவ்வொரு மின்னஞ்சலிலும் பதிவு செய்யப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

News November 12, 2025

சென்னை: இறந்த தம்பியை பார்த்து சகோதரி உயிரிழப்பு

image

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தோர் வின்சென்ட் ஆரோக்கியநாதன், 72, வேளாங்கண்ணி தாமஸ், 77. இருவரும், உடன் பிறந்தவர்கள். திடீரென உடல்நல குறைவால் வின்சென்ட் ஆரோக்கியநாதன் இறந்தார். தம்பி இறந்ததை அறிந்த வேளாங்கண்ணி தாமஸ், கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதபோது, திடீரென மயங்கி விழுந்த வேளாங்கண்ணி தாமஸ், அங்கேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!