News November 10, 2024
நீடாமங்கலம் அருகே டீசல் குடித்து ஒருவர் பலி

நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, விவசாயி. இவர் அருகில் இருந்த வீட்டிற்கு சென்றபோது தண்ணீர் தாகம் எடுத்ததால் அங்கு பாட்டிலில் இருந்த டீசலை தண்ணீரென நினைத்து குடித்து விட்டார். இதனால் வலியால் துடித்த அவர் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
Similar News
News December 7, 2025
திருவாரூர் ரயில் நிலையத்தில் தீவிர பரிசோதனை

திருவாரூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நினைவு நாளான நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் போலீசார் ரயில் நிலைய நுழைவாயில் தளங்களில் பயணிகளிடம் தீவிரமாக பரிசோதனை நடத்தினார்கள். மேலும், உடமைகள் அனைத்தும் மேற்பார்வை செய்யப்பட்டது.
News December 7, 2025
திருவாரூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
திருவாரூர் மாவட்டத்தின் மழை அளவு

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், கோட்டூர், ராயநல்லூர், பல்லவராயன், கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி அளவில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


