News August 3, 2024
நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

பெருமழையின் காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதி மிகப்பெரும் சேதம் அடைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் சாமிநாதன் இன்று கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.
Similar News
News July 5, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 05.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, தாராபுரம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News July 5, 2025
திருப்பூரில் வேலை வாய்ப்பு!

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Filed Marketing Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் <
News July 5, 2025
காங்கேயம் அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்

சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(40) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.