News December 4, 2024

நிவாரண பொருட்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்

image

பெரம்பலூர் நகர், துறைமங்கலம் நான்கு ரோடு அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பெறப்பட்ட ரூ.23.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News November 2, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று (நவ.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 1, 2025

பெரம்பலூரில் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்த ஆட்சியர்

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

News November 1, 2025

பெரம்பலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

பெரம்பலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!