News December 4, 2024

நிவாரண பொருட்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்

image

பெரம்பலூர் நகர், துறைமங்கலம் நான்கு ரோடு அருகில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பெறப்பட்ட ரூ.23.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News November 28, 2025

பெரம்பலூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது பெரம்பலூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

பெரம்பலூர்: SIR படிவம் நிரப்பும் பணி தீவிரம்

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் அருகே உள்ள தொண்டப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கலான, அனுக்கூர் மற்றும் அ.குடிக்காடு ஆகிய கிராமத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, SIR படிவம் திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுமக்கள் பலர் SIR படிவத்தை பதிவு செய்து வருகின்றனர்.

News November 28, 2025

பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில்ட்ரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. பின்பு வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் பல வகைகளை உண்ண வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்.

error: Content is protected !!