News April 23, 2025
நில உடைமை விவரங்கள் பதிவு அவகாசம் நீட்டிப்பு!

2025-26 ஆம் ஆண்டிற்கான பிரதா மந்திரி கவுரவ நிதித்திட்ட PMKISAN இன் முதல் தவணை தொகை விடுவிக்கப்பட உள்ளன. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 116181 விவசாயிகளில் 85513 விவசாயிகள் மட்டும் நில உடைமை விவரங்கள் பதிவு செய்து இருப்பதால், மீதமுள்ள விவசாயிகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியர் உமா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
ராசிபுரம் அருகே நடந்த துயரம்!

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த தணிகை செல்வன் (20) கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடந்துசெல்லும் போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், தம்மம்பட்டியை சேர்ந்த சரத் (19) மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
ராசிபுரம் அருகே நடந்த துயரம்!

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த தணிகை செல்வன் (20) கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடந்துசெல்லும் போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், தம்மம்பட்டியை சேர்ந்த சரத் (19) மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல்லில் இருந்து இன்று இரவு 11:00 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ள 17235 பெங்களூரூ – நாகர்கோவில் தினசரி விரைவு ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


