News January 2, 2025

நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முதல் வெள்ளிக்கிழமை தீர்வு

image

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்களில் நிலம் தொடர்பான கோரிக்கைகள் அதிகளவில் வரப்பெறுகின்றன. இவ்வாறு பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் முதல் வெள்ளிக்கிழமைகளில் நிலம் தொடர்பான கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

image

விழுப்புரத்தில் இன்று (நவ.17) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் விழுப்புரத்தில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

விழுப்புரம்: கை துண்டாகி கிடந்த நபர்!

image

விழுப்புரம்: பானாம்பட்டை சேர்ந்வர் அசோக். இவர், நேற்று (நவ.16) அங்குள்ள ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ரயில், அவர் மீது மோதியது. இதில், அசோக் இடது கை துண்டாகி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

News November 16, 2025

பட்டனூர்: SIR பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

வானூர் வட்டம் பட்டானூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்குப்பதிவு அலுவலர் வித்தியாதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!