News September 14, 2024

நிலத்தகராறில் மூதாட்டி அடித்து கொலை

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே நிலத்தகராறில் மூதாட்டி நசரம்மாள்(65) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் குமரவேல் என்பவர் மூதாட்டி நசரம்மாளை தடியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

விழுப்புரம்: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

image

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, நாளை முதல் வருகிற டிச.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் தகுதிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News November 16, 2025

விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 16) கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் விலைகள் உயர்ந்துள்ளன. பல சந்தைகளில் விலை மாறுபாடும் ஏற்பட்டுள்ளது. கோழி இறைச்சி ஒரு கிலோவிற்கு ரூ.210 முதல் ரூ.250 வரையிலும், ஆட்டு இறைச்சி ரூ.800 முதல் ரூ.950 வரையிலும் விற்பனையாகிறது. மீன் சந்தையில் சாதாரண மீன்கள் ரூ.150 முதல் ரூ.250 வரையிலும், தரமான மீன்கள் ரூ.600 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுகின்றன.

News November 16, 2025

விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!