News September 14, 2024
நிலத்தகராறில் மூதாட்டி அடித்து கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே நிலத்தகராறில் மூதாட்டி நசரம்மாள்(65) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் குமரவேல் என்பவர் மூதாட்டி நசரம்மாளை தடியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

விழுப்புரம் கே கே ரோடு சாலையில் விழுப்புரம் நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு நபர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து விசாரித்த போலீசார் விழுப்புரம் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சக்திவேல் தமிழ்ச்செல்வன் என்பது அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்த நிலையில் அவர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
விழுப்புரம்:விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு!

வெங்கடேசன் தனது மோட்டார் சைக்கிளில் சூரியபிரியாவை நேற்று (நவ.18) காலையில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செஞ்சி – விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே சென்றபோது எதிரே விழுப்புரத்திலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், சூரியபிரியா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த கஞ்சனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை


