News January 23, 2025
நிர்வாண படத்தை அனுப்பி மிரட்டியவர் கைது

செல்போன் செயலின் மூலம் கடனை கொடுத்துவிட்டு, கொடுத்த தொகைக்கு மேல் பல மடங்கு பணத்தை கடன் வாங்கியவரின் படத்தை நிர்வாணமாக மாற்றி அனுப்பி மிரட்டி, இந்தியா முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சார்ந்த முகமது ஷபி (32) என்பவர் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் வைத்து புதுச்சேரி இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர்.
Similar News
News November 19, 2025
புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 20.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 19, 2025
புதுச்சேரி: சாலையை ஆக்கிரமித்து பேனர்-போலீசார் வழக்கு பதிவு

புதுச்சேரி – கடலூர் சாலை, கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகச் சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து, கொடிக்கம்பம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவிப் பொறியாளர், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 19, 2025
புதுவை: சிறுமியை மணந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2015-ம் ஆண்டு 17 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அறிந்த உருளையன்பேட்டை போலீசார், காமராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையில், புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.


