News January 23, 2025
நிர்வாண படத்தை அனுப்பி மிரட்டியவர் கைது

செல்போன் செயலின் மூலம் கடனை கொடுத்துவிட்டு, கொடுத்த தொகைக்கு மேல் பல மடங்கு பணத்தை கடன் வாங்கியவரின் படத்தை நிர்வாணமாக மாற்றி அனுப்பி மிரட்டி, இந்தியா முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சார்ந்த முகமது ஷபி (32) என்பவர் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் வைத்து புதுச்சேரி இணைய வழி காவல் ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் இன்று கைது செய்தனர்.
Similar News
News November 26, 2025
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

இந்திய அரசியல் அமைப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, அரசியல் அமைப்பு தின உறுதி மொழியை வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
News November 26, 2025
JUST IN புதுவை: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
புதுச்சேரி: ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஜ்ராஜ் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட கூடாது. சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் பொதுமக்களுக்கு இடையூராக கால்நடைகளை திரிய விட கூடாது. தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.


