News August 7, 2024

நியூட்ரினோ திட்ட வழக்கு ஒத்திவைப்பு

image

தேனி, பொட்டியாபுரத்தில் நியூட்ரினோ திட்டத்துக்காக 1000 மீட்டரில் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனால் தேனியில் நில வளம், விவசாயம், வன விலங்குகள், மேற்குதொடர்ச்சி மலையின் பசுமை தொடர்களுக்கு பேரழி ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைபாடு என்ன? என கேள்வி எழுப்பியதோடு வழக்கை ஆக.13 ஒத்திவைத்தார்.

Similar News

News November 19, 2025

கூடலூர் நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு பிடிவாரன்ட்

image

கூடலுார் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதிப்பிற்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர் மலைச்சாமி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். நீதிமன்றத்தில் நேற்று (நவ.18) ஆஜராக நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

News November 19, 2025

தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

தேனி மாவட்டத்தில், சின்னமனூர், கம்பம், தேனி, காமாட்சிபுரம் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (நவ.19) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மேற்கண்ட பகுதிகளின் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி – ஆட்சியர் தகவல்

image

அண்ணன் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது இதற்காக நவம்பர் 21ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும் மேலும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுப்போட்டி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!