News March 27, 2025
நியாயவிலை கடைகள் வழக்கம் போல் இயங்கும்

ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான மார்ச்.29 சனிக்கிழமையாக அமைவதோடு மார்ச்.30,31 அரசு விடுமுறை என்பதால் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி நெல்லையில் மார்ச்.29 அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்,நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 27, 2025
மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் கைபேசி எண் விவரம்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.27) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 27, 2025
நெல்லை: கணவர் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News November 27, 2025
நெல்லை: தீயணைப்புத் துறை லஞ்ச விவகாரத்தில் புதிய திருப்பம்

நெல்லை தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் பணம் சிக்கிய விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தீயணைப்பு வீரர் ஆனந்த் உள்ளிட்ட 2 பேர் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பூட்டியிருந்த துணை இயக்குனர் அலுவலக அறையை சிறந்தது யார் சிசிடிவி கேமராவில் சிக்கிய நபர் யார் என தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


