News March 27, 2025

நியாயவிலை கடைகள் வழக்கம் போல் இயங்கும்

image

ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான மார்ச்.29 சனிக்கிழமையாக அமைவதோடு மார்ச்.30,31 அரசு விடுமுறை என்பதால்  குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி நெல்லையில் மார்ச்.29 அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல்,நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Similar News

News October 17, 2025

நெல்லை: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா??

image

தீபாவளிக்கு தென்காசிக்கு கிளம்பிட்டீங்களா? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம், டிக்கெட் உறுதி போன்றவைகளை பார்க்க செயலிகள் இன்னும் பதிவிறக்கம் செய்யுறீங்களா ?? இனி அது தேவையில்லை! அரசின் RAILOFY (+91 9881193322) வாட்ஸ் ஆப் எண்ணில் ரயில் எந்த பிளாட்பார்ம், எப்போ வரும், டிக்கெட் முன்பதிவு போன்றவைகளை இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவது மூலம் தெரிஞ்சுக்கலாம். ஊர்க்கு வர மக்களுக்கு SHAREபண்ணுங்க.

News October 17, 2025

நெல்லை: பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ரெய்டு

image

நெல்லை, பாளை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பில்டிங் செக்ஷனில் விஜிலென்ஸ் ADSP ராபின் DSP மெக்லரின் எஸ்கால் மற்றும் போலீசார் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தில் செயற் பொறியாளராக இருக்கும் ஜோசப் ரன் ஸ்டண்ட் பிரீஸ் – ஐ பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News October 17, 2025

நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கான அக்டோபர் மாத குறைதீர்க்கும் கூட்ட நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும். அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பார்கள். எனவே அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!