News April 2, 2025
நினைத்ததை நடத்தும் சாய்பாபாவின் திருக்கோவிலின்

சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு முறையாவது சீரடிக்கு சென்று சாய்பாபாவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கிறது. திருச்சி அக்கரைப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவிலானது அச்சு அசலாக சீரடி கோவில் போலவே கட்டப்பட்டுள்ளது. சீரடி செல்ல முடியாதவர்கள் இந்த கோவிலிக்கு சென்று வந்தால் சீரடிக்கு சென்று வந்த அனுபவத்தை பெறலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 5, 2025
தஞ்சை: பல கோடி ரூபாய் மோசடி

தஞ்சாவூரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் மர்ஜித் அலி(44), ஹவா பீவி(40) ஆகியோரை கைது செய்தனர்.
News December 5, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒக்கநாடு கீழையூர், வீரராசம்பேட்டை மற்றும் முள்ளுக்குடி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணிமுதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் நாளை (டிச. 5) மாரியம்மன் கோயில், திருப்பிறம்பியம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பனி காரணமாக காலை காலை 9 – 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது
News December 5, 2025
தஞ்சை கலெக்டர் தகவல்!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டு 1 லட்சத்து 97 ஆயிரத்து 100 ஏக்கரில் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது 3 லட்சத்து 26 ஆயிரத்து 95 ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


