News March 6, 2025

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது

image

அரியலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா(30) என்பவரை பிப்.28ஆம் தேதி கொலை செய்ததாக, கோடாலி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்(35), அவரது மனைவி விமலா(32) ஆகியோரை கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மகேஷின் அக்காள் மகன் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் தேடிய நிலையில், 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 16, 2025

அரியலூர்: விபத்தில் பெண் தலைமை காவலர்!

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலைய பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெண் தலைமை காவலர் விபத்தில் காயம். பெரியதத்தூர் கிராமத்தில் இருந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மாடு குறுக்கிட்டு வந்து வாகனத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்து அவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News November 16, 2025

அரியலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு <<>>கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 16, 2025

அரியலூர்: ஆசிரியர் தகுதித் தேர்வு!

image

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், கயர்லா பாத், செந்துறை, கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் டெட் பேப்பர் 2 தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அன்னை தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதி வருகின்றனர்.

error: Content is protected !!