News August 9, 2024

நாளை விருதுநகரில் இருந்து புறப்படுகிறது

image

மதுரை கோட்டத்தில் பகல் வேலைகளில் பொறியியல் பிரிவு சார்பில் தூண்கள் நிறுவும் பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குருவாயூரிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ்(16128) நாளை(ஆக.,10 ஆம் தேதி) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT.

Similar News

News December 4, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கை முறை உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அம்மாவுக்கும், மணிகண்டனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

விருதுநகர்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து உங்க மாவட்டத்திற்கு வீடுகள் உள்ளதா என்பதை செக் பண்ணுங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 4, 2025

விருதுநகர்:அரசு பஸ்ஸில் சில்வர் டம்ளரில் மது அருந்திய டிரைவர்

image

ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு புது பஸ் ஸ்டாண்ட் வந்தது. பஸ் டிரைவர் பாலமுருகன், எவர் சில்வர் டம்ளரில் ஊற்றி, காபி போல பிறர் நினைத்துக் கொள்வர் என கருதி, மது அருந்திக் கொண்டிருந்தார். இதை கவணித்த பயணியர், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பஸ்சில் இருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மாற்று டிரைவர் மூலம் ஏற்பாடு செய்தனர்.

error: Content is protected !!