News August 2, 2024
நாளை முதல் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நாளை (ஆகஸ்ட் 3) முதல் 14ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் 13.30 மணி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர், பிராட்வேக்கு 20 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Similar News
News October 25, 2025
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அனஸ்தீசியா டெக்னீசியன், அறுவை அரங்கு டெக்னீசியன், ஆர்தோபீடிக் டெக்னீசியன் ஆகிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் 48 இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 17 வயது பூர்த்தியடைந்த, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்கள் நவ.14 க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
சென்னையில் டெங்கு காய்ச்சல் ; மக்களே உஷார்!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து, காய்ச்சல், கடும் தலைவலி, வாந்தி, மூட்டு வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தினமும் ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். டெங்கு அறிகுறி, காய்ச்சல் இருந்தால் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சென்று அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (24.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*


