News May 16, 2024
நாளை முதல் திண்டுக்கல்லில் தீவிர பரிசோதனை

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் தெரிவித்த தகவலின் பெயரில் நகரில் தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் மாநகர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் பழைய டயர்கள் விற்பனை செய்யும் இடம், மற்றும் நன்னீர் தேங்கியுள்ள இடங்களில் தீவிர பரிசோதனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News December 5, 2025
ஒட்டன்சத்திரம் அருகே உரம் தின்ற ஆடுகள் பலி!

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோர் நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்காக விட்டு வந்த ஆடுகளில், அப்பகுதியில் இருந்த உரம் கலந்த அரிசியை சாப்பிட்ட மூன்று ஆடுகள் மர்மமாக உயிரிழந்தன. தகவல் அறிந்த இடையக்கோட்டை கால்நடை மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை பரிசோதித்துப் புதைத்தனர். இறப்புக்கான காரணம் பின்னர் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 5, 2025
திண்டுக்கல்லில் ஒரே நாளில் நடந்த பயங்கர சம்பவம்!

திண்டுக்கல் இந்திரா நகர் மாரிமுத்து (50) நேற்று முன்தினம் வெளியில் சென்றபோது, மர்மநபர் வீட்டில் நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை திருடினார். அதேநாள் சொப்பணதேவி வீட்டில் ரூ.1 லட்சமும் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி மூலம் மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் சதீஷ்குமார் (24) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். திருடப்பட்ட நகை, பணமும் மீட்கப்பட்டன.
News December 5, 2025
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே சடலம்!

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். முன்பு கடந்த 2ம் தேதி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி உதயகுமார்(48) என்பதும், சில மாதங்களுக்கு முன்பு வீடு விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


