News May 16, 2024

நாளை பேச்சிப்பாறை அணை திறப்பு..?

image

மலையோரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  இதனால் பேச்சிப்பாறை அணைக்கட்டில் 42 அடி நீரையும், பெருஞ்சாணி அணையில் 70 அடி நீரையும் தேக்கி வைக்க பொதுப்பணித்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளை பெரும்பாலும் அணையின் மறுகால் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 11, 2026

குமரி: நில E.C, சிட்டா இனி Whatsappல்…!

image

கன்னியாகுமரி மக்களே, நிலத்துக்கான E.C வில்லங்க சான்றிதழ் வேணுமா? இ<>ங்கு க்ளிக் <<>>செய்து hi அனுப்புங்க, (Registration Department) என்ற பிரிவில் ‘வில்லங்கச் சான்றிதழ்’ (E.C) யை தேர்வு செய்யுங்க. அதில் மாவட்ட பெயர், சார்பதிவாளர் அலுவலகம், சர்வே எண் பதிவிட்டால் சுலபமாக Whatsappல் E.C பிடிஎப் -ஆக வந்துவிடும். இதில் சிட்டாவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க…

News February 11, 2026

குமரி: போன் தொலைந்து விட்டதா? NO டென்ஷன்.!

image

கன்னியாகுமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 11, 2026

குமரியில் போதைப் பொருளை கண்டுபிடிக்க புதிய மோப்ப நாய்

image

குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டனர். 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் மாவட்டத்தில் போதைப் பொருட்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக புதியதாக மோப்ப நாய் சென்னையில் இருந்து விரைவில் குமரி மாவட்டம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!