News August 2, 2024

நாளை பத்திரப்பதிவு அலுவலம் செயல்படும்

image

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(ஆக.,3) பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு அன்று ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய விரும்புவர் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலை 10 மணிக்கு பத்திரப்பதிவு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

BREAKING தூத்துக்குடி துறைமுகத்தில் 3 பேர் பலி

image

தூத்துக்குடியில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 17, 2025

தூத்துக்குடி வீரர்களே., அழைப்பு உங்களுக்கு தான்!

image

தூத்துக்குடி மக்களே, தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கு Level 1 முதல் 5 பணியிடங்களுக்கு 67 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது முடித்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அக். 12க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.29,200 வரை வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வேலை. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 17, 2025

தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!