News August 8, 2024
நாளை குமரி வரும் அயலக தமிழர்கள்

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா, தலைமையில், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர், நாளை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் அயலகத் தமிழர் மாணவர்களை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து வளாகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கப்பல் மூலம் திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிக்க செல்கின்றனர்.
Similar News
News December 6, 2025
குமரி: பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

நாகர்கோவில் அருள்மிகு தழுவிய மகாதேவர் ஆலய தெப்பக்குளத்தை சீர் செய்ய நிதி இல்லை என காரணம் கூறிய அறநிலைய துறையை கண்டித்து நாகர்கோவில் வடக்கு மண்டல பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் கோவில் வளாகத்தில் இன்று (டிச-6) நடைபெற்றது. வடக்கு மண்டல பாஜக தலைவர் சுனில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
News December 6, 2025
குமரி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

குமரி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <
News December 6, 2025
குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

குமரி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


