News January 22, 2025

நாளை கால்நடை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி 

image

ஏனாத்தூரில் உள்ள கால்நடைத்துறை விவசாயிகள் பயிற்சி மையத்தில் நாளை (ஜனவரி 23) வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் முயல் வளர்ப்பு, முயல் வகைகள், நோய் தடுப்பு, பராமரிப்பு பணிகள், வளர்ப்பு உபகரணங்கள், தீவனம் பற்றி இலவசமாக கால்நடைத்துறை பயிற்சி மைய இயக்குனர் டாக்டர் பிரேம வள்ளி அவர்கள் பயிற்சியும் ஆலோசனைகளும் அளிக்க உள்ளார். விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News September 18, 2025

காஞ்சிபுரம்: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

image

காஞ்சிபுரம் மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்

News September 18, 2025

காஞ்சிபுரத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

காஞ்சிபுரம் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க! மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News September 18, 2025

காஞ்சிபுரம்: பட்டாவில் திருத்தம் செய்வது இனி ஈஸி!

image

காஞ்சி மக்களே! தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் & புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!