News April 13, 2025
நாளைக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

ஏப்ரல் 15 அன்று மீன் பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன் பிடி விசை படகுகளை நாளை 14-4-2025 இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்திற்கு கரை திரும்பிட படகு உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
நாகையில் இப்படி ஒரு இடமா!

நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பிரலபன சுற்றுலா பகுதியாக அறியப்படுகிறது. இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க சோழர்களின் துறைமுகம் மற்றும் அதன் கலங்கரை அமைந்திருந்தது. பின்னர் 2004-யில் ஏற்பட்ட சுமானியின் போது முழுமையாக பாதிக்கப்பட்டு, கலங்கரையின் எஞ்சிய பகுதிகள் மட்டுமே உள்ளது. மேலும் இங்கிருந்துதான் ராமர் இலங்கையை பார்த்ததாக இதிகாசத்தில் கூறப்படும் ராமர் நின்ற இடத்தில் அவரது பாதமும் உள்ளது. SHARE IT.
News November 15, 2025
நாகை: ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் நாளை நவ.16ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை பொறியியல் கல்லூரி மற்றும் ஈசனூர் ஆரிபா கல்லூரி ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்,
News November 15, 2025
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மக்களே… வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


