News April 13, 2025

நாளைக்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

image

ஏப்ரல் 15 அன்று மீன் பிடி தடைகாலம் அமலுக்கு வருவதால் ஏற்கனவே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன் பிடி விசை படகுகளை நாளை 14-4-2025 இரவு 12 மணிக்குள் தங்களுடைய படகு பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்திற்கு கரை திரும்பிட படகு உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

நாகை: நகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

image

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, கொடி ஊர்வலம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் புது பள்ளி தெருவில் தொடங்கி கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நாகூர் செல்ல உள்ளது. எனவே ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள தற்காலிக பந்தல் விளம்பர தட்டிகள் மற்றும் ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றுமாறு நாகை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News November 13, 2025

நாகை: மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தல், நலத்திட்ட உதவி மற்றும் உபகரணங்கள் பெறுதல் போன்ற பணிகள் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு ,அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!