News August 3, 2024

நாளுக்கு நாள் உயரும் பூக்களின் விலை

image

ஆடி மாதத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு பூ சந்தையில் நேற்றைவிட பூக்களின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. ரோஜா பூ ரூ.150, செண்டுமல்லி ரூ.80, சாமந்தி பூ ரூ.200, சம்பங்கி பூ ரூ.140, கனகாம்பரம் ரூ.800, மல்லி ரூ.400, அரளி பூ ரூ.50க்கு விற்பனையாகிறது. மழை காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. நேற்றைவிட ஒவ்வொரு பூக்களின் விலையும் சுமார் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.

Similar News

News October 22, 2025

சென்னை: EB பில் நினைத்து கவலையா??

image

சென்னை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <>இங்கு கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

News October 22, 2025

சென்னை: ரோடு சரியில்லையா? 72 மணிநேரத்தில் தீர்வு

image

சென்னை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News October 22, 2025

சென்னையில் டன் கணக்கில் பட்டாசு கழிவுகள்

image

சென்னை: நேற்று மாலை 6 மணி வரை 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 6.89 மெட்ரிக் டன், பெருங்குடி மண்டலத்தில் 6.03 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 6,000க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

error: Content is protected !!