News March 28, 2025

நார்வே நாட்டில் வேலை என பல கோடி மோசடி 

image

நார்வே நாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநுால் விளம்பரத்தை பயன்படுத்தி சகுபர் சாதிக் என்பவர் 50க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்டவர்கள் இராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அதில், ஒருவர் மனைவியின் தாலியை விற்று ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கட்டினேன் எனக் கூறி அனைவரது பணத்தையும் போலீசார் மீட்டுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். BE AWARE *SHARE

Similar News

News April 6, 2025

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக விழாவில் 42 பவுன் திருட்டு

image

உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோயிலில் நான்கு ரத வீதிகள் மற்றும் தரிசனத்திற்காக நின்ற கோவை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 8 பெண்களிடம் கொள்ளையர்கள் 42 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.கழுத்தில் இருந்த செயின் திருடு போனதை அறிந்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் வரிசையாக புகார் அளித்தனர்.

News April 5, 2025

பாம்பன் திறப்பு – பிரதமர் ட்வீட்

image

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நாளை ஏப்.6ஆம் தேதி ராம நவமி நாளில் தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் அடிக்கல் நாட்டப்படும்” என பதிவிட்டுள்ளார்.

News April 5, 2025

ராமேஸ்வரத்திற்கு நாளை முதல் தினசரி விரைவு ரயில் இயக்கம்

image

ராமநாதபுரத்திற்கு நாளை (ஏப்ரல்.06) முதல் சென்னை தாம்பரத்திலிருந்து பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்துக்கு 16103/04 TBM RMM தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து தினசரி மாலை 6.10 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரத்திலிருந்து தினசரி மாலை 4 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே தென் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!